ஒளிச்சேர்க்கை கதை

அறிந்துகொள்ளவேண்டிய சொற்களை காட்டு/மறை

தைலகாய்டு (Thylakoid): தட்டுக்கள் போன்ற இந்த அமைப்புக்களினுள்ளேதான் ஒளி சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும்.

பசுங்கனிகம் (Chloroplast): சூரியஒளி ஆற்றலை தாவரங்கள் உபயோகப்படுத்தும் வகையிலான ஆற்றலாக (சர்க்கரை) மாற்றுகின்ற தாவரங்களின் ஒரு பகுதி. கீழ்நிலைத்தாவரங்களான பாசிகளும் பசுங்கனிகங்களை கொண்டிருக்கின்றன.

பச்சையம் (Chlorophyll): தாவரங்களுக்கு பச்சை நிறம் அளிக்கும் நிறமி.

பச்சயம் மற்றும் பசுங்கனிகத்தின் கதை

Chloroplasts in plant cell

உருண்டையான பச்சைநிற பசுங்கனிகங்கள் தாவர செல்களின் மத்தியில் இருக்கும்.  புகைப்பட உதவி  Kristian Peters

பசுங்கனிகங்கள் சின்ன சின்ன தொழிற்சாலைகளாக தாவர செல்களின் உள்ளே காணப்படுபவை.இவை சூரிய ஒளியின் ஆற்றலை உபயோகித்து தாவரங்கள் உணவு தயாரிக்க உதவுகின்றது.இவ்வாறூ தயரிக்கபட்ட உணவை உடனே உபயோக்கவும் முடியும் தாவரங்கள் உணவை  மாவாகவும் சர்க்கரையாகவும் சேமித்துவைத்து  பூக்கும் காலத்திலோ அல்லது  வளர்ச்சிக்கு தேவையான போதோ உபயோக்கவும் முடியும்

பசுங்கனிகம்அமைப்பு

பசுங்கனிகங்களின் உள்ளே தைலகாய்டுகள்  என்னும் அடுக்கி வைக்கபட்டிருக்கும் தட்டுக்கள் போன்ற அமைப்புக்கள் இருக்கும் கிரேக்க மொழியில் thalakos என்றால் பை  என்று பொருள். மேலுறையினல் சூழப்பட்டிருக்கும் தைலக்காய்டுகளின் உட்புறம் lumen எனப்படும் இந்த தைலகாய்டு தட்டுக்களுக்குள்ளேதான் ஒளிசார்ந்த அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும்

மனித உடல்களில் பசுங்கனிகம் இல்லை, அ தற்குப்ப்திலாக ஆற்றல் செயல்பாடுகள் நடக்கும் மைட்டோகான்ட்ரியாக்கள் உள்ளன

Chloroplast model

இந்த பசுங்கனிகத்தின் மாதிரி அமைப்பு அடுக்கடுக்கான தைலகாய்டுகளை காண்பிக்கிறது புகைப்பட உதவி - Guillermo Estefani (artinaid.com).

மைட்டோ கான்ட்ரியா பசுங்கனிகம் இவை இரண்டுமே ஆற்றலை ஒரு வடிவத்திலிருந்து மற்றோரு வடிவத்துக்கு மாற்றும் பகுதிகளாகும்.

தாவரங்களுக்கு பசுங்கனிகங்கள் எவ்வாறு கிடைத்திருக்கும் முன்னொரு காலத்த்தில் பசுங்கனிகங்களே பேக்டீரியாக்களாக இருந்திருந்து  பகிருயிரியாக அவை இன்னொரு செல்லுக்குள் புகுந்து வாழத்துவங்கி அந்த செல்லிலிருந்து தாவரங்கள் உருவாகியிருக்கலாம்.

பசுமையாகஇருப்பது

பச்சையம் என்பது பசுங்கனிகத்தினுள்ளிருக்கும் ஒரு நிறமி, இதில்தான் ஒளிச்சேர்கைக்கான இன்றியமையாத  செயல்பாடுகள் அனைத்துமே நடைபெறும். இவையே தாவரங்களின் பச்சை நிறத்துக்கும் காரணம். வண்ணங்களின் பல வகைகளை நாம் அறிந்திருக்கிறோம். பச்சையம்  ஒளிக்திரின் பல வண்ணங்களில் சிவப்பு மற்றும் நீல வண்ணங்களை மட்டுமே ஈர்த்துக்கொள்ளும் பச்சையை பிரதிபலித்துவிடும்

இலையுதிகாலத்தில் இலைகளை உதிர்க்கும் மரங்கள்

குளிர்காலத்தில் இலைகளை இழக்கும் தாவரங்கள் அதற்கு முன்பு இலையுதிர்காலத்திலேயே பச்சையத்தை இழக்கத் தொடங்குகின்றன. இது இலைகளின் பச்சை நிறத்தை பறிக்கிறது. புகைப்படம் ஜான் ஃபோலர்.

பச்சையத்துடன் வேறு பல வண்ணங்களுக்கான நிறமிகளையும் தாவரங்கள் கொண்டிருக்கின்றன.இவையும் ஒளியை ஈர்க்க உதவுகின்றன.இலையுதிர் காலங்களில் பச்சையம் மிகக்குறைவாக காணப்படும் அப்போது மஞ்சள் சிவப்பு உள்ளிட்ட பிற  வண்ணங்களை நாம் மரங்களிலும் செடி கொடிகளிலும் காணலாம்.

சூரிய ஒளியின் எல்லா ஒளிக்கதிர்களையும் தாவரங்கள் ஈர்த்து அதனால் பாதிப்படையாமல் இருக்க இந்த பச்சையமல்லாதபிற நிறமிகள் உதவுகின்றன


கூடுதல் புகைப்படங்கள் - Wikimedia Commons. Algae

புகைப்படங்கள்; Leonardo Ré-Jorge.

மேலும் அறிந்து கொள்ள: ஒளியை உண்ணுதல்

சிவப்பு ஆல்கா

பச்சையம் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கான ஒரே நிறமி அல்ல. சிவப்பு மற்றூம் காவி நிற பாசிகளும் ஃபுயூகோஸேந்தின் எனப்படும் ஒளிசேர்க்கைக்கான் நிறமியை கொண்டிருக்கும்

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

 

Share to Google Classroom